சேலம் அய்யந்திருமாளிகை நேசக்கரங்கள் ஆதரவு ஏற்போர் இல்ல மாணவ, மாணவியர் இல்லத்தில் கர்ம வீரர் காமராஜர் அவர்களின் 120 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நேசக்கரங்கள் இல்ல தலைவர் எஸ்.செல்லதுரை தலைமை தாங்கினார்.
இல்ல நிறுவன செயலாளர் என்.பெரியசாமி கல்வி தந்தை காமராஜரின் வாழ்கை வரலாறு, அவர் நாட்டிற்கு ஆற்றிய சேவைகள் குறித்து இல்ல மாணவ, மாணவியர்களிடையே எடுத்து கூறினார். மாணவ, மாணவிகள் விழாவில் கலந்து கொண்டு மலர் தூவினார்கள்.
விழாவில் அலுவலக மேலாளர் துரைசாமி, இல்ல கண்காணிப்பாளர் சண்முகபிரியா மற்றும் இல்ல பணியாளர்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். அனைவர்க்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. முடிவில் இல்ல வார்டன் மதன் நன்றி கூறினார்.